search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    கைக்குழந்தையுடன் பெண்ணை கடத்திய தருமபுரி வாலிபர்- கணவர் போலீசில் புகார்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கைக்குழந்தையுடன் பெண்ணை கடத்திய தருமபுரி வாலிபர் மீது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே முலிக்கல் சவுளூர் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 33) கூலித்தொழிலாளி. இவருக்கு பவித்ரா (வயது 22) என்ற மனைவியும், லித்தி கிஷோர் (2½) என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 13-ந் தேதி பவித்ரா, தனது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் 2 பேரும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் இருவரையும், தருமபுரியை சேர்ந்த வெங்கசேடன் (வயது 30) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என காவேரிப்பட்டணம் போலீசில் இளவரசன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×