search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், ஈங்கூர் சிப்காட் ரோடு, மேற்கு வீதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகள் சவுபர்ணிகா (17). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கு பாடத்தில் சவுபர்ணிகா மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார்.

    இது குறித்து தாய் ருக்குமணி நல்லா படிக்க வேண்டும். அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சவுபர்ணிகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தினை (வி‌ஷம்) சாப்பிட்டார்.

    இதனையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி சவுர்பணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×