என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னிமலை அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன், ஈங்கூர் சிப்காட் ரோடு, மேற்கு வீதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகள் சவுபர்ணிகா (17). இவர் ஈங்கூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்று 2-வது அலை பரவி வருவதால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆன்லைனில் நடத்தப்பட்ட கணக்கு பாடத்தில் சவுபர்ணிகா மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார்.
இது குறித்து தாய் ருக்குமணி நல்லா படிக்க வேண்டும். அப்போது தான் நல்ல வேலை கிடைக்கும் என அறிவுரை கூறியுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சவுபர்ணிகா சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தினை (விஷம்) சாப்பிட்டார்.
இதனையடுத்து அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த மாணவி சவுர்பணிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்