search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூரில் கொரோனாவால் மாநகராட்சி அதிகாரி பலி

    மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 600ஐ கடந்தது. நேற்று கொஞ்சம் குறைந்து 583 ஆக இருந்தது. இன்று வேலூர் மாவட்டத்தில் 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பரிசோதனை குறைவாக செய்யப்பட்டது. இதனால்தான் பாதிப்பும் குறைவாக உள்ளது. நாளை பாதிப்பு மேலும் அதிகரிக்கும் .

    வேலூர் சத்துவாச்சாரி மவுண்ட் வியூ அப்பார்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திரகுமார் (வயது 52).வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.‌ இதனையடுத்து காட்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

    நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனை தொடர்ந்து பாலச்சந்திர குமாரை சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பாலசந்திரகுமார் பரிதாபமாக இறந்தார்.

    மாநகராட்சி அதிகாரி கொரோனாவால் பலியான சம்பவம் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×