search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா தொற்று

    சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா தொற்றால் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது முதியவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயது நபர் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 10,933 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×