என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைதான தங்கராஜ்
நத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை
By
மாலை மலர்30 April 2021 5:55 PM GMT (Updated: 30 April 2021 5:55 PM GMT)

நத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை:
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள குட்டுப்பட்டி-கரந்தமலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு (வயது 40). விவசாயி.
அதே ஊரை சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில், தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி தங்கராஜ் காய்களை பறித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வெள்ளைக்கண்ணு, தான் வைத்திருந்த டார்ச் லைட்டை மரத்தில் அடித்து பலாக்காய் பறிப்பது யார்? என்று விசாரித்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், மரத்தில் இருந்து பலாக்காயை பறித்து வெள்ளைக்கண்ணுவின் தலையில் போட்டார். இதனால் நிலைதடுமாறிய வெள்ளைக்கண்ணு கீழே விழுந்தார். சிறிதுநேரத்தில் அவர் எழுந்து விட்டார்.
இதற்கிடையே தங்கராஜூம் மரத்தில் இருந்து கீழே இறங்கினார். தன்மீது பலாக்காயை வீசிய ஆத்திரத்தில் இருந்த வெள்ளைக்கண்ணு, தான் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தங்கராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வெள்ளைக்கண்ணு வைத்திருந்த உருட்டுக்கட்டையை தங்கராஜ் பறித்தார். பின்னர் அந்த கட்டையால், வெள்ளைக்கண்ணுவை தங்கராஜ் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைக்கண்ணு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் வெள்ளைக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
