என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள்

    கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களுக்கு உள்ளே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடையை தொடர்ந்து கோவில்களில் வெளியில் நின்று பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கோவில் களுக்கு வரும் பக்தர்கள் வெளியில் நின்று மன வேதனை யுடன் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன.

    இதில் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    தற்போது மீண்டும் கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்றும், கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தும் சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
    Next Story
    ×