என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்28 April 2021 10:45 AM GMT (Updated: 28 April 2021 10:45 AM GMT)
மூலக்குளத்தில் குடும்பத்தினருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் அன்னை தெரேசாநகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 3 மாதமாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை அவரது குடும்பத்தினர் டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தனர்.
இந்தநிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் ரவிக்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அன்று முதல் ரவிக்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர். ரவிக்குமார் வீட்டு வராண்டாவில் தூங்கினார்.
நேற்று காலை பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டில் ரவிக்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தை கண்டு அவரது மனைவி தேவி அதிர்ச்சியடைந்தார்.
அவரது உடல் அருகே ரவிக்குமார் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் நான் தெய்வமாக மதிக்கும் மாமா, அக்கா, மாமனார், மாமியார் மற்றும் அன்பான மனைவி, பாசமான மகன், மகள் மற்றும் மாமன் மகன்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு புற்றுநோய் உள்ளதால் அது குணமாக போவது கிடையாது. ஆகையால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவும், இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை மூலக்குளம் அன்னை தெரேசாநகர் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு தேவி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 3 மாதமாக ரவிக்குமார் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரவிக்குமாரை அவரது குடும்பத்தினர் டாக்டரிடம் அழைத்து சென்று காண்பித்தனர்.
இந்தநிலையில் மருத்துவ பரிசோதனை முடிவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வந்தது. அதில் ரவிக்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அன்று முதல் ரவிக்குமார் மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்றனர். ரவிக்குமார் வீட்டு வராண்டாவில் தூங்கினார்.
நேற்று காலை பார்த்தபோது வீட்டின் மெயின் கேட்டில் ரவிக்குமார் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தை கண்டு அவரது மனைவி தேவி அதிர்ச்சியடைந்தார்.
அவரது உடல் அருகே ரவிக்குமார் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் நான் தெய்வமாக மதிக்கும் மாமா, அக்கா, மாமனார், மாமியார் மற்றும் அன்பான மனைவி, பாசமான மகன், மகள் மற்றும் மாமன் மகன்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு புற்றுநோய் உள்ளதால் அது குணமாக போவது கிடையாது. ஆகையால் இந்த முடிவை எடுத்துள்ளேன். நீங்கள் அனைவரும் என்னை மன்னித்துவிடவும், இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து அவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X