என் மலர்
செய்திகள்

கைது
கூடலூரில் தேயிலை தோட்டத்தில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
கூடலூரில் தேயிலை தோட்டத்தில் கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஜான்(வயது 40), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த அலி பாவா (44), ஆணை செத்தக்கொல்லியை சேர்ந்த அப்பாஸ் (36) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆணை செத்தக்கொல்லி பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story






