என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்தலூரில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
Byமாலை மலர்25 April 2021 3:13 PM GMT (Updated: 25 April 2021 3:13 PM GMT)
பந்தலூரில் 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பந்தலூர்:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த சுதாகரன்(வயது 24) என்பவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதற்கிடையில் சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவளை பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவளிடம் பெற்றோர் கேட்டபோது, தன்னை சுதாகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுதாகரனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X