search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் எரிச்சநத்தம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி மகன் முத்துப்பாண்டி (21) என்பவர் வேலை செய்துள்ளார். அவரது நடவடிக்கை சரி இல்லாததால் கடந்த 4 மாதத்துக்கு முன்னர் அவரை செல்வராஜ் வேலையில் இருந்து நீக்கி உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி நேற்று உரக்கடைக்காரர் செல்வராஜ் தனது மகள் சவுந்தர்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அசிங்கமாக பேசி வண்டியை காலால் மிதித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்வராஜுக்கும், சவுந்தர்யாவுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.

    இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
    Next Story
    ×