என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
Byமாலை மலர்24 April 2021 12:04 PM GMT (Updated: 24 April 2021 12:04 PM GMT)
கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் எரிச்சநத்தம் பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புதுக்கோட்டையை சேர்ந்த குப்புசாமி மகன் முத்துப்பாண்டி (21) என்பவர் வேலை செய்துள்ளார். அவரது நடவடிக்கை சரி இல்லாததால் கடந்த 4 மாதத்துக்கு முன்னர் அவரை செல்வராஜ் வேலையில் இருந்து நீக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டி நேற்று உரக்கடைக்காரர் செல்வராஜ் தனது மகள் சவுந்தர்யாவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அசிங்கமாக பேசி வண்டியை காலால் மிதித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்வராஜுக்கும், சவுந்தர்யாவுக்கும் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவம் குறித்து செல்வராஜ் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X