என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை பல்கலைக்கழகம் 5 நாட்கள் மூடல்- மாணவர்கள் வெளியேற உத்தரவு
Byமாலை மலர்23 April 2021 7:13 AM GMT (Updated: 23 April 2021 7:13 AM GMT)
கொரோனா தொற்று அதிகரிப்பால் புதுவை பல்கலைக்கழகம் இன்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூட்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (23-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.
பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.
விடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.
விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.
விடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
அத்துடன் உணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.
அதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுவை பல்கலைக்கழக பதிவாளர் சேகர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுவை மத்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (23-ந்தேதி) முதல் 27-ந்தேதி வரை 5 நாட்கள் பல்கலைக்கழகம் மூடப்படும்.
பல்கலைக்கழகத்தின் அத்தியாவசிய பணிகளுக்கு இந்த மூடல் பொருந்தாது.
விடுதிகளில் தங்கி உள்ள பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், மாணவ-மாணவிகள் வருகிற 25-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும்.
விடுதிகள் திறக்கும் தேதி பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்படும். விடுதிகளில் இருந்து புறப்படும் போது தங்கள் அறைகளில் வைத்துள்ள விலை மதிப்புள்ள சாதனங்கள், லேப்-டாப், செல்போன், கல்வி சான்றுகள் ஆகியவற்றை பத்திரமாக கையோடு எடுத்து செல்வது அவசியம்.
விடுதிகளில் தங்கி உள்ள மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கும், உள்ளூர் பாதுகாவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும்.
அத்துடன் உணவு விடுதி வருகிற 26-ந் தேதி முதல் மூடப்படும்.
அதுபோல் விடுதியில் தங்காத இதர பி.எச்.டி. ஆராய்ச்சியாளர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வர அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X