search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    அரியலூர் அருகே லாரி மோதி விவசாயி பலி

    அரியலூர் அருகே லாரி மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 75). விவசாயியான இவர் ஆலந்துறையார் கட்டளை சாலையில் உள்ள அவருடைய வயலுக்கு நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×