என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    தமிழக சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 894 பேர் கொரோனா சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது 478 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.
    Next Story
    ×