என் மலர்
செய்திகள்

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம்
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 4,533 படுக்கைகள்- கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 4,533 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததே பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகும். வேலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 15 லட்சத்து 59 ஆயிரத்து 968 பேரில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 653 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 75 சிறப்பு முகாம்களில் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலின்படி வேலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 310 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். வேலூர் மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 1,86,836 பேர் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,37,437 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், யாருக்கும் பக்கவிளைவோ, மருத்துவ கோளாறுகளோ நிகழவில்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளில் 1,654 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இ.எஸ்.ஐ., அரசு பென்லேன்ட், குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 535 படுக்கைகள் உள்ளன. வி.ஐ.டி., குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 1,288 படுக்கைகள் தயாராக உள்ளது. இங்கு இன்று முதல் (திங்கட்கிழமை) லேசான அறிகுறி காணப்படும் நபர்கள் அனுமதிக்கப்படுவர்.
வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழிற்நுட்ப கல்லூரி, குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் ஆகியவை கொரோனா வார்டுகளாக செயல்படுத்தப்படும். கொரனா வார்டுகளில் 2,364 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 4,533 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 257 ஐ.சி.யு. வசதி கொண்ட படுக்கைகளும், 1,127 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் தட்டுபாடு இருக்காது.
ரெம்டெசிவீர் மாத்திரைகள் 1,032 உள்ளன. ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஓரிருநாளில் வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. ஜிங் சல்பேட் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள், தலா 3 லட்சம் இருப்பு உள்ளன. முதற்கட்டமாக அவற்றில் 80 ஆயிரம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட் சில்லரை விற்பனை காய்கறி, பூக்கடைகள் தற்காலிக மார்க்கெட்டிற்கு மாற்றப்படுகிறது. கிராமப்புறங்களில் செயல்படும் வாரச்சந்தைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி மைதானங்களுக்கே இடமாற்றம் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததே பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகும். வேலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 15 லட்சத்து 59 ஆயிரத்து 968 பேரில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 653 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 75 சிறப்பு முகாம்களில் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலின்படி வேலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 310 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். வேலூர் மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 1,86,836 பேர் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,37,437 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், யாருக்கும் பக்கவிளைவோ, மருத்துவ கோளாறுகளோ நிகழவில்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளில் 1,654 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இ.எஸ்.ஐ., அரசு பென்லேன்ட், குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 535 படுக்கைகள் உள்ளன. வி.ஐ.டி., குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 1,288 படுக்கைகள் தயாராக உள்ளது. இங்கு இன்று முதல் (திங்கட்கிழமை) லேசான அறிகுறி காணப்படும் நபர்கள் அனுமதிக்கப்படுவர்.
வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழிற்நுட்ப கல்லூரி, குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் ஆகியவை கொரோனா வார்டுகளாக செயல்படுத்தப்படும். கொரனா வார்டுகளில் 2,364 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 4,533 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 257 ஐ.சி.யு. வசதி கொண்ட படுக்கைகளும், 1,127 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் தட்டுபாடு இருக்காது.
ரெம்டெசிவீர் மாத்திரைகள் 1,032 உள்ளன. ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஓரிருநாளில் வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. ஜிங் சல்பேட் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள், தலா 3 லட்சம் இருப்பு உள்ளன. முதற்கட்டமாக அவற்றில் 80 ஆயிரம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட் சில்லரை விற்பனை காய்கறி, பூக்கடைகள் தற்காலிக மார்க்கெட்டிற்கு மாற்றப்படுகிறது. கிராமப்புறங்களில் செயல்படும் வாரச்சந்தைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி மைதானங்களுக்கே இடமாற்றம் செய்யப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.
Next Story






