search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    அரசு, தனியார் அலுவலகங்களில் சிறப்பு நடமாடும் தடுப்பூசி முகாம்

    புதுவையில் சிறப்பு நடமாடும் தடுப்பூசி முகாம் இன்று முதல் 4 நாட்கள் நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு சுகாதார துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஒரு மாதமாக நடமாடும் பரிசோதனை முகாம்கள் மற்றும் காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    புதுவையில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை 100 இடங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது. மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசியை மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று வழங்க நடமாடும் தடுப்பூசி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குழுக்கள் மூலம் பொது இடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

    தற்போது புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தடுப்பூசியை வழங்க 2 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் வாரங்களில் மேலும் பல குழுக்கள் அமைக்கப்படும். காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளிலும் நடமாடும் தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள ரெட்டியார்பாளையம் மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அது இன்று(திங்கட்கிழமை) வரை தொடரும். தொற்று அதிகமாக உள்ள கொசப்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை கண்காணிப்பு நடவடிக்கை நடைபெறும்.

    இதேபோல் இன்று(திங்கட்கிழமை) தலைமை செயலகத்திலும், நாளை(செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற வளாகத்திலும், வருகிற 21-ந் தேதி உழவர்சந்தை, தாவரவியல் பூங்காவிலும், 22-ந் தேதி தனியார் மாலிலும் சிறப்பு நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×