search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊட்டி காந்தல் பகுதியில் கேரட் தோட்டத்தை சூறையாடிய காட்டுயானை

    நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் புறநகர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளதாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    காந்தல் பகுதியில் சாண்டி நள்ளா நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள அரசு கால்நடைப் பண்ணைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அங்கு பயிரிடப்பட்ட கேரட் தோட்டத்தை தின்றும், மிதித்தும் முற்றிலும் சேதப்படுத்தியது. இதுகுறித்து தோட்ட உரிமையாளர்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தபோது ஒற்றை பெண் யானையாக இருக்கலாம் என்று தெரியவந்தது.

    இந்த யானை மசினகுடி பகுதியில் இருந்து சோலூர் பகுதி வழியாக முத்தநாடு பகுதிக்கு வந்து அங்கிருந்து சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தின் மறு கரைக்கு வந்து காந்தல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக வனத் துறையினர் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

    Next Story
    ×