என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஊட்டி காந்தல் பகுதியில் கேரட் தோட்டத்தை சூறையாடிய காட்டுயானை
ஊட்டி:
காந்தல் பகுதியில் சாண்டி நள்ளா நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள அரசு கால்நடைப் பண்ணைக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டு யானை ஒன்று புகுந்துள்ளது. அங்கு பயிரிடப்பட்ட கேரட் தோட்டத்தை தின்றும், மிதித்தும் முற்றிலும் சேதப்படுத்தியது. இதுகுறித்து தோட்ட உரிமையாளர்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தபோது ஒற்றை பெண் யானையாக இருக்கலாம் என்று தெரியவந்தது.
இந்த யானை மசினகுடி பகுதியில் இருந்து சோலூர் பகுதி வழியாக முத்தநாடு பகுதிக்கு வந்து அங்கிருந்து சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தின் மறு கரைக்கு வந்து காந்தல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக வனத் துறையினர் இப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்