என் மலர்
செய்திகள்

மழை
சாத்தூர் பகுதியில் தொடர் மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
சாத்தூர் பகுதியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சாத்தூர்:
சாத்தூர், லட்சுமியாபுரம், கண்மாய்சூரன்குடி, ஒத்தையால், மேட்டமலை, சின்னகமன்பட்டி, சிந்தப்பள்ளி, இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, சத்திரப்பட்டி, சடையம்பட்டி, படந்தால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் சாத்தூர் பகுதி முழுவதும் நிலவியது. இந்த மழை விவசாயத்திற்கு பெரிதும் உதவும் என விவசாயிகள் கூறினர்.
Next Story






