என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிகாரிக்கு தொற்று உறுதி- ஊட்டி ரெயில் நிலையத்தில் கிருமி நாசினி தெளிப்பு
Byமாலை மலர்13 April 2021 3:53 AM GMT
ஊட்டி நகராட்சி ஊழியர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள், மாஸ்டர் அறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தார்.
ஊட்டி:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஊட்டி-குன்னூர் இடையே தினமும் 3 முறை மலைரெயில் இயக்கப்படுகிறது. இதில் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலைய அதிகாரிக்கு( ஸ்டேஷன் மாஸ்டர்) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதியானது.
தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடம் என்பதால் ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி ஊழியர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள், மாஸ்டர் அறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர ஊட்டி-குன்னூர் இடையே தினமும் 3 முறை மலைரெயில் இயக்கப்படுகிறது. இதில் வெளி மாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊட்டி ரெயில் நிலைய அதிகாரிக்கு( ஸ்டேஷன் மாஸ்டர்) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதியானது.
தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடம் என்பதால் ரெயில் நிலையத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி நகராட்சி ஊழியர் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள், மாஸ்டர் அறை, வளாகங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தார். மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X