search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் கோணமூலை அண்ணாநகர் பகுதி தகரத்தால் மறைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சத்தியமங்கலம் கோணமூலை அண்ணாநகர் பகுதி தகரத்தால் மறைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    சத்தியமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

    சத்தியமங்கலம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர், சேலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் சேலத்திலேயே தங்கியுள்ளார்.

    இவருடைய மைத்துனர் சத்தியமங்கலம் கோணமூலையை சேர்ந்தவர். அந்த பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சேலம் சென்று மாமாவை சந்தித்துவிட்டு வந்தார்.

    இந்தநிலையில் போலீஸ் அதிகாரி உடல் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதனால் உரக்கடைக்காரர், அவருடைய மனைவி, மகன், மகள், மாமியார் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்குமே கொரோனா இருப்பது தெரிந்தது.

    இதில் உரக்கடைகாரரின் மாமியார் மட்டும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோணமூலை ஊராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் செல்லக்கூடிய வழி தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×