என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்12 April 2021 4:53 PM GMT (Updated: 12 April 2021 4:53 PM GMT)
சத்தியமங்கலம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர், சேலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் சேலத்திலேயே தங்கியுள்ளார்.
இவருடைய மைத்துனர் சத்தியமங்கலம் கோணமூலையை சேர்ந்தவர். அந்த பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சேலம் சென்று மாமாவை சந்தித்துவிட்டு வந்தார்.
இந்தநிலையில் போலீஸ் அதிகாரி உடல் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் உரக்கடைக்காரர், அவருடைய மனைவி, மகன், மகள், மாமியார் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்குமே கொரோனா இருப்பது தெரிந்தது.
இதில் உரக்கடைகாரரின் மாமியார் மட்டும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோணமூலை ஊராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் செல்லக்கூடிய வழி தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X