என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரும்பார்த்தபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்12 April 2021 10:13 AM GMT (Updated: 12 April 2021 10:13 AM GMT)
அரும்பார்த்தபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்குளம்:
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின்ரோட்டில் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 9-ந் தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்தார்.
அப்போது அங்கு இருந்த பக்கவாட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் ரூ.1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தில் வில்லியனூர் மெயின்ரோட்டில் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். கடந்த 9-ந் தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வந்தார்.
அப்போது அங்கு இருந்த பக்கவாட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உண்டியலில் ரூ.1 லட்சம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X