என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூரில் சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் - 4 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 April 2021 4:02 AM GMT (Updated: 12 April 2021 4:02 AM GMT)
கடலூரில் சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கே.என்.பேட்டை பகுதியை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவளது தந்தை சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். தாய் கடலூரிலேயே வேலை பார்த்து வருகிறார். சிறுமி மட்டும் கே.என்.பேட்டையில் உள்ள தனது பெரியப்பாவின் பராமரிப்பில் இருந்து வருகிறாள்.
இந்த நிலையில் வீட்டிலேயே இருந்து வந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் மிரட்டி, கடந்த 6 மாதங்களாக அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அவளது பெரியப்பா, சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அவள், கே.என்.பேட்டை சத்தியசாய் நகர் மற்றும் மலைபுதுநகர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய 2 வாலிபர்களும், கே.என்.பேட்டையை சேர்ந்த 21 வயதுடைய 2 வாலிபர்களும் சேர்ந்து கடந்த 6 மாதமாக தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறி கதறி அழுதார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியப்பா, கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X