search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கடலூர் மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று

    கடலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 292 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 127 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இவர்களில் மராட்டியத்தில் இருந்து கடலூர் வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து குமராட்சி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த 9 பேருக்கும், விருதுநகரில் இருந்து என்.எல்.சி. பகுதிக்கு வந்த ஒருவருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 2 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 41 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 72 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 24 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
    Next Story
    ×