search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதியில் சுகாதாரத்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×