search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி

    ஊத்தங்கரை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லாவி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சக்திவேல் (வயது 35). விவசாயி. இவர் நேற்று சாலமரத்துப்பட்டி கிராமத்தில் இருந்து தனது மாமியார் வீடான பாரண்டப்பள்ளி புதூர் கிராமத்திற்கு  மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓலைப்பட்டி வழியாக சென்றபோது எதிரே வந்த சரக்கு வேன் மோதியதில் சக்திவேல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×