search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    புதுவையில் 93 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி மையம்

    பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    பிரதமர் வேண்டுகோளின்படி புதுவையில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 14-ந் தேதி வரை மெகா கொரோனா தடுப்பூசி திருவிழாவை நடத்த கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

    புதுவை பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் 93 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கொரோனா தடுப்பூசி மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான பொறுப்பாளர்கள் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், 93 அரசு, தனியார் பள்ளிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர், இணையம் உள்ளிட்ட வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    தேவையான இடங்களில் பல்நோக்கு ஊழியர்கள், சுகாதார ஊழியர்களை நியமித்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×