என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமரணம்- போலீசில் தந்தை புகார்
Byமாலை மலர்8 April 2021 10:00 AM GMT (Updated: 8 April 2021 10:00 AM GMT)
திருவண்ணாமலை அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கணவருடன் ஓட்டுப்போட சென்றபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுவதால் கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவரது மகள் மோனிஷா (21). இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாமிதுரை என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோனிஷா ஓட்டு போடுவதற்காக கணவருடன் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மோனிஷா தூக்குப்போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏழுமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் மகள் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 49). இவரது மகள் மோனிஷா (21). இவருக்கும், அய்யம்பாளையத்தை சேர்ந்த சாமிதுரை என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மோனிஷா ஓட்டு போடுவதற்காக கணவருடன் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் இருப்பதாகவும் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மோனிஷா தூக்குப்போட்டு இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏழுமலை திருவண்ணாமலை தாலுகா போலீசில் மகள் சாவில் மர்மம் உள்ளதாக புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோனிஷாவுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X