search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருக்கழுக்குன்றம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி

    திருக்கழுக்குன்றம் அருகே சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் கருகி பலியானார்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த எடையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ஹேமலதா (30). தனது 2 மகன்களுடன் அதே ஊரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு சமையல் அறையில் குழந்தைகளுக்கு சாப்பாடு செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×