search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம்- கல்லூரி மாணவர் கைது

    செய்யாறு அருகே 17 வயது பள்ளி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவர். இருவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார் .

    அப்போது தனது செல்போனில் மாணவியை நிர்வாணமாக படம் எடுத்து அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரமடைந்த மாணவி தனது தாயிடம் கூறினார்.

    இது குறித்து மாணவியின் தாய் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×