search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கோபி அருகே தூக்குப்போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

    கோபி அருகே உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடத்தூர்:

    கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). ஆட்டோ டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு அவர் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சதீசுக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் சதீஷ் மனமுடைந்து வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். 

    இதை கண்டதும் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். 

    இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×