search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லீலாவதி
    X
    லீலாவதி

    வேலூரில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை

    வேலூரில் 8-ம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் லீலாவதி (வயது 13). அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாடங்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லீலாவதி வீட்டில் இருந்து பாடங்கள் படித்து வந்தார். மேலும் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லீலாவதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி லீலாவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×