என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அஞ்செட்டியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா
Byமாலை மலர்2 April 2021 11:48 AM GMT (Updated: 2 April 2021 11:48 AM GMT)
அஞ்செட்டியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள அத்தி நத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் அஞ்செட்டி டாக்டர் அசோக் மற்றும் மருத்துவ குழுவினர் பெண்கள் விடுதியில் தங்கி உள்ள மாணவி உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
அவருக்கு வீட்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மருத்துவ குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X