search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வந்தவாசியில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    வந்தவாசியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் தோப்பு காலனியை சேர்ந்தவர் விஜயன்(வயது 35) கூலித்தொழிலாளி. அவருடைய அண்ணன் மகன் தேவதாஸ் (9) கடந்த 26-ந் தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதனால் மனமுடைந்த விஜயன் சம்பவத்தன்று தனது மனைவி நாகவள்ளியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பயங்கரஅலறல் சத்தம் கேட்டுள்ளது.

    வீட்டின் பின்னால் போய் பார்த்த போது, அங்குள்ள மரத்தில் விஜயன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×