என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
ஈரோடு அருகே ரெயில் மோதி மூதாட்டி பலி
ஈரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்துக்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், மூதாட்டி தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






