என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் காயம்
Byமாலை மலர்29 March 2021 11:11 AM GMT (Updated: 29 March 2021 11:11 AM GMT)
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:
செய்யாறை அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செய்யாறு நகரில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சரக்கு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர்.
செய்யாறு அருகே காஞ்சீபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 சிறுவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக சென்ற கார்களின் மூலம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெயஸ்ரீ உள்பட 7 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறை அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செய்யாறு நகரில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சரக்கு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர்.
செய்யாறு அருகே காஞ்சீபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 சிறுவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக சென்ற கார்களின் மூலம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெயஸ்ரீ உள்பட 7 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X