search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 150 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 160 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    Next Story
    ×