என் மலர்
செய்திகள்

தற்கொலை
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி அருகே உள்ள கள்ளியூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 25). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் தமிழரசனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தமிழரசன் இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






