என் மலர்
செய்திகள்

கைது
வேப்பனப்பள்ளி அருகே வாலிபர்கள் மீது தாக்குதல்- தொழிலாளி கைது
வேப்பனப்பள்ளி அருகே வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பீமாணடப்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் ராஜ்குமார் (21), ஒட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசலபதி (26). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வி.மாதேப்பள்ளி அருகே சின்ன சூளமலை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி திம்மராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள், இவர்கள் 3 பேரையும் வழிமறித்து தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திம்மராஜை கைது செய்தனர். அவருடைய நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






