என் மலர்
செய்திகள்

கைது
மானாமதுரை அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
மானாமதுரை அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை ரெயில்வே நிலையம் பின்புறம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த கிளங்காட்டூரைச் சேர்ந்த ரவுடி அன்பழகன், அமர்நாத், விக்கி என்ற பாம்பு விக்கி, சுரேஷ்பாண்டியன், ரமேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






