என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் மெக்கானிக் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்17 March 2021 11:16 AM GMT (Updated: 17 March 2021 11:16 AM GMT)
ஈரோட்டில் தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு முனிசிபல்காலனி பாரதி தியேட்டர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கோபால் (வயது 27). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரோகித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் கார்த்திகா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி பாரதி தியேட்டர்ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் கோபால் (வயது 27). இருசக்கர வாகன மெக்கானிக். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ரோகித் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. கோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் கார்த்திகா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட கோபால் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X