search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார், பரம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர். அப்போது தங்களது கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற பரம்பூரை சேர்ந்த வாசுதேவன் (வயது 56), முத்தையா (60), கல்லம்பட்டியை சேர்ந்த ராமு (42) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×