search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த பெண்- போலீஸ் விசாரணை

    கடலூர் முதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் பெண் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் சஞ்சீவிராயன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். மீனவர். இவரது மனைவி கலா(50). சேகர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டார். இந்த நிலையில் இவரது வீட்டு செல்போனுக்கு உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார். போனை யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர், சேகரின் வீட்டுக்கு வந்து பார்த்த் போது கதவு பூட்டப்பட்டு இருந்தது. வழக்கமாக சேகர் மீன்பிடிக்க செல்லும் போது ஒரு சாவியை அருகில் உள்ள ஒரு கடையில் கொடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த சாவியை வாங்கி வந்த, உறவினர் கதவை திறந்து பார்த்தார். அங்கு கலா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கடலூர் முதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது தூக்கு கயிறு ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. இதன் மூலம் கலா தற்கொலை செய்ய வேண்டும் என்கிற முடிவில் தூக்குபோட்டு கொண்டு இருக்கலாம். அப்போது கயிறு அறுந்து அவர் கீழே விழுந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இருப்பினும் சந்தேகத்தின் பேரில் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மோப்ப நாய் அங்கிருந்து எங்கும் செல்லாமல் அந்த பகுதியிலேயே நின்றது.

    தொடர்ந்து கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×