search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம்

    புதுவையில் பொதுமக்கள் தரப்பில் 599 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 941 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

    தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் பல்வேறு நோய் பாதித்த நிலையில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நேற்று 3-வது நாளாக இந்த தடுப்பூசி போடும் பணி நடந்தது.

    இதற்காக மாநிலத்தில் 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தற்போது பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களைவிட பொதுமக்களின் பங்கேற்பு அதிக அளவில் உள்ளது.

    குறிப்பாக நேற்று முன் தினம் சுகாதார பணியாளர்கள் 250 பேரும், முன்கள பணியாளர்கள் 581 பேரும் மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருந்தனர். ஆனால் பொதுமக்கள் தரப்பில் 599 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 941 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் புதுவையில் 1,286 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 794 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 166 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

    38 ஆயிரத்து 959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 669 பேர் பலியாகி உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 97.90 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×