என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி
Byமாலை மலர்3 March 2021 11:53 AM GMT (Updated: 3 March 2021 11:53 AM GMT)
ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
திருச்சி மாவட்டம். முசிறி சாராயகாரத் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் என்பவரது மனைவி பூரணி என்கிற சம்பூரணம் (வயது 56). பரமசிவம் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால், பூரணி குளித்தலை பகுதியில் தங்கி பெரியார் நகரில் வசிக்கும் முசிறி அருகே ஜம்புநாதபுரத்தில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் சுகன்யா (32) என்பவரது வீட்டில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது ஸ்கூட்டரில் பூரணியை ஏற்றிக்கொண்டு பெரியார் நகரில் இருந்து சென்று கொண்டிருந்தார். திருச்சி-கரூர் சாலையில் குளித்தலை பெரிய பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பூரணி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பூரணி உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X