என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பர்கூர், காளிமலை மலைவாழ் மக்கள் சாதி சான்று கேட்டு வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மழை பகுதிகளான ஈரட்டி, மின் தாங்கி, எப்ப தான் பாளையம், கல் வாழை, கோவில் நத்தம் மற்றும் எண்ணமங்கலம், மலையனூர், குரும்பபாளையம், மேடு நல்ல கவுண்டன் கொட்டாய், காளிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதி மக்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கபடவில்லை. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் கூறியும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
இதை கண்டித்து மலைப் பகுதி மக்கள் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க போவதாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
இது நாள் வரை எங்களுக்கு என்ன ஜாதி என்றும் எந்தப் பட்டியலில் உள்ளோம் என்றும் தெரிய வில்லை. சாதி சான்று வழங் காததால் பல தலை முறை யாக எந்தவித கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார முன் னேற்றம் இல்லாமல் வாழ்ந்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது.
மேலும் கோவை அரசு பதிவு இதழில் 1887-ல் பவானி தாலுகாவில் பர்கூர் மலை மற்றும் காளி மலையில் மலையாளி இன மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சேர்வராயன் மலை மற்றும் கொல்லி மலையில் வசிக்கும் மலையாள இனத் தை சார்ந்தவர்கள் என்று தெளிவாக கூறப்பட் டுள்ளது.
சேலம் மாவட்ட அரசு பதிவிதழில்1918-ல் பவானி தாலுகாவில் பாலமலை, பர்கூர் மலை மற்றும் காளி மலைப்பகுதியில் கொல்லி மலையை சார்ந்த மலையாளி இன மக்கள் வசிக்கிறார்கள் என்று தெளிவாகக் கூறப் பட்டுள்ளது.
இதில் பாலமலையில் உள்ள மலையாளி இன மக்கள் மட்டும் மலையாளி பழங்குடியினஜாதிச் சான்று பெற்று வருகிறார்கள். பர்கூர் மலை மற்றும் காளி மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு ஜாதிச்சான்று கிடையாது.
ஏற்கனவே மலையாளி இன மக்கள் உள்ள சேலம், திருச்சி, நாமக்கல், பெரம் பலூர், விழுப்புரம், வேலூர், தர்மபுரி, திருவண்ணா மலை ஆகிய மாவட்டத்தில் பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கப்படுகிறது.அதே போன்று ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலையக மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணித்து வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகிறோம். மேலும் கிராம நிர்வாக அலுவலரிடம் எங்கள் ரேசன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் ஒப்படைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்