search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையால் வேலைவாய்ப்புகள் உருவாகும் -பிரதமர் மோடி பேச்சு

    விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும் என பிரதமர் மோடி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை உள்ளிட்ட புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நாடு முழுவதும் உள்ள வேளாண் மக்களுக்கு 4 வழிச்சாலை பயனளிக்கிறது. விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்படும். 4 வழிச்சாலையால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ஆலயத்திற்கு எளிதாக செல்லலாம். 4 வழிச்சாலையால் அப்பகுதியில் தொழில்கள் அதிகரித்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். 

    புதுச்சேரியில் வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். வருங்காலத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கும். சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கான நமது நோக்கத்தின் ஒரு பகுதியாக, நான் ஜிப்மரில் ரத்த சேமிப்பு மையத்தை திறந்து வைத்துள்ளேன்.  

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×