என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே கூடங்குளம் அணுமின் நிலைய மேலாளர் தற்கொலை
Byமாலை மலர்25 Feb 2021 7:08 AM GMT (Updated: 25 Feb 2021 7:08 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவராஜ்(29). கூடன்குளம் அணுமின் நிலைய பிலாண்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று (25ம் தேதி) வேப்பனபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில், இவர் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை. எனவே, இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணம் நிறுத்திவிடுவார்கள் என சிவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று காலை தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த சிவராஜ், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர், நேற்று மதியம் தனது வீட்டிற்குள் சென்ற அவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அப்பா நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து, சிவராஜின் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவராஜ்(29). கூடன்குளம் அணுமின் நிலைய பிலாண்ட் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் இன்று (25ம் தேதி) வேப்பனபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது.
இந்த நிலையில், இவர் திருமணம் செய்ய இருந்த பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையவில்லை. எனவே, இது அதிகாரிகளுக்கு தெரிந்தால் திருமணம் நிறுத்திவிடுவார்கள் என சிவராஜிக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் நேற்று காலை தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த சிவராஜ், மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர், நேற்று மதியம் தனது வீட்டிற்குள் சென்ற அவர், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது அப்பா நாராயணன் கொடுத்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி வழக்கு பதிவு செய்து, சிவராஜின் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X