search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
    ஈரோடு:

    தாளவாடி, சூசைபுரம், கல்மண்டிபுரம், எரகனள்ளி, தலமலை, திம்பம், ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஒடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.

    இதேபேல் ஈரோடு மாவட்டத்தின் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பவானிசாகர் -27.8, ஈரோடு -25, பவானி -18, அம்மாபேட்டை -17.2, தாளவாடி -17, கொடுமுடி -15.8, கவுந்தப்பாடி -13.4, மொடக்குறிச்சி -10, எலந்தகுட்டைமேடு -7.2, சத்தியமங்கலம் -7, வரட்டுப்பள்ளம் -5, கோபி -5, சென்னிமலை -3, கொடிவேரி -1. மாவட்டத்தில் மொத்தம் 172.4 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
    Next Story
    ×