என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை
Byமாலை மலர்22 Feb 2021 12:57 PM GMT (Updated: 22 Feb 2021 12:57 PM GMT)
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
ஈரோடு:
தாளவாடி, சூசைபுரம், கல்மண்டிபுரம், எரகனள்ளி, தலமலை, திம்பம், ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஒடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
இதேபேல் ஈரோடு மாவட்டத்தின் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானிசாகர் -27.8, ஈரோடு -25, பவானி -18, அம்மாபேட்டை -17.2, தாளவாடி -17, கொடுமுடி -15.8, கவுந்தப்பாடி -13.4, மொடக்குறிச்சி -10, எலந்தகுட்டைமேடு -7.2, சத்தியமங்கலம் -7, வரட்டுப்பள்ளம் -5, கோபி -5, சென்னிமலை -3, கொடிவேரி -1. மாவட்டத்தில் மொத்தம் 172.4 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
தாளவாடி, சூசைபுரம், கல்மண்டிபுரம், எரகனள்ளி, தலமலை, திம்பம், ஆசனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் ஆசனூர் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் உள்ள ஒடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள பல குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி உள்ளன.
இதேபேல் ஈரோடு மாவட்டத்தின் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகரில் நேற்று மதியம் முதல் மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழையால் மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடை கழிவுநீருடன் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பவானிசாகர் -27.8, ஈரோடு -25, பவானி -18, அம்மாபேட்டை -17.2, தாளவாடி -17, கொடுமுடி -15.8, கவுந்தப்பாடி -13.4, மொடக்குறிச்சி -10, எலந்தகுட்டைமேடு -7.2, சத்தியமங்கலம் -7, வரட்டுப்பள்ளம் -5, கோபி -5, சென்னிமலை -3, கொடிவேரி -1. மாவட்டத்தில் மொத்தம் 172.4 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X