search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    குழந்தைகளுடன் விளையாடியபோது கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி

    குழந்தைகளுடன் விளையாடியபோது கடை ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் அண்ணா வீதி விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 40). அரிசி மாவு கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பிரபாவதி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தனது குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தனபால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனபால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×