search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கடலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று

    கடலூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 24 ஆயிரத்து 721 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 287 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியான உமிழ்நீர் பரிசோதனை முடிவில் புதிதாக 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. 

    நேற்று மட்டும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 399 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 53 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலும், 33 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×