என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது
Byமாலை மலர்20 Feb 2021 10:38 AM GMT (Updated: 20 Feb 2021 10:38 AM GMT)
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூர் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 45). சம்பவத்தன்று இவர் நேற்று முன்தினம் மதியம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவன் திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 44) என தெரியவந்தது. இதனைடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது திருட்டு சம்பந்தமாக 75 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X